Saturday, July 28, 2012
Friday, July 27, 2012
Thursday, July 26, 2012
பாத கொலுசு ...
கரும் பச்சை இலை மீறி
தரும் மஞ்சள் தண்டு கொண்டு
மலர் மஞ்சள் தாமரை பாதம்
மண் பட்டால் நோகும் என்று
மனம் பதைத்து போகுதடி ...
நல் முத்து வர்ணம் கொண்டு
நன்று செழித்த உன் பாதம் கண்டு
நாளடைவில் செழித்து வளர்ந்த
மேனி காண நெஞ்சு துடிகுமடி ...
வெண் சங்கில் முத்தாரம் போல்
உன் தந்த காலில் ஓர் ஆரம்
நீ தளிர் நடை போடும் போதெல்லாம்
உன் நளினத்தை பறை சாற்றுமடி ..
உன் பாத கொலுசாக என் நெஞ்சும் ஏங்குமடி..
உன் பாதம் தான் தாங்க
மலரெல்லாம் தவம் பண்ணுதடி
மலர்வனமே நீ என்று
மனம் சோர்ந்து போகுமடி
உன் பாதம் பட்ட நீர் பட்டால்
பன்னீர் துளி என்று தாங்குமடி ..
உன் பாதம் கண்ட நீரெல்லாம்
எனக்கு பன்னீர் துளி ஆனதடி
தேவர் வாழ அமுதம் பால் கடல் அடி
இந்த தேவன் வாழ அமுதம்
உன் பாதக் காலடி ...
நீராடும் உன் பாதம் கண்டு
கள்ளுண்ட மந்தியாகி
மதி மயங்கி மனம் தேம்புதடி
மலரே உன் பாதம் தாங்கி
மணி மெட்டி போடும்
நாளுக்காய் மனம்
மயக்கம் கொள்ளுதடி ..
என்ன பார்க்கிறாய்
எனக்காக நீ படித்த காதல் வார்த்தைகள்
என் உணர்விலே கலந்த மூச்சுக்கள்
காற்றோடு காற்றாகி கண்ணீராய் ஆனதடா
உன்னை தேடி என் பாதம்
காடு மேடெல்லாம் அலையுதடா..
உன்னை தேடும் என் பாதம்
உணர்விழந்து போனாலும்
உனக்காக என் பாத கொலுசு
ஒலித்துகொண்டிருக்கும்
உயிருள்ளவரை உன்னை தேடி ...
Monday, July 23, 2012
Sunday, July 22, 2012
Thursday, July 19, 2012
அலை
அந்தி மாலை
அழகான வேளை
தன் தீராத காதலை
தினம் தோறும்
அலை அவள்
கரைகளில் எழுதியவண்ணம்
காலம் காலமாய்
மாலை பொழுதுக்காய்
பகலெல்லாம் சுட்டெரித்து
தன் கோபத்தை ..
தன் கடல் எனும் காதலனை
சேரமுடியாது தவித்த சோகத்தை
அவனுள்ளே முக்குளித்து
முழுவதும் குளிர
எத்தனிக்கும் கதிரவன்
இவற்றை எல்லாம் பார்த்து
வெக்கி சிவந்த பொன்வானம்
சிவந்த செவ்வானம் ....
சிந்தை மயக்க
சிலிர்ப்பு ஊட்டும்
மயக்கும் மாலை பொழுது
எனவனும் நானும்
எழுதபடாத ஓவியங்களாய்
செதுக்கப்பட்டத சித்திரங்களாய்
படிக்கப்படாத காவியங்களாய்
பாரில் தோன்றும்
பலவித இயற்க்கை அழகினை
ரசித்த வண்ணம் ...
கையேடு கை கோர்த்து
கண்ணோடு கண் நோக்கி
கருத்தோடு கலந்து
இயற்க்கை காதலுக்கு
நம் காதல் சளைத்ததல்ல
சவால் விட்ட வண்ணம்
சரசமாடிய தருணங்கள்
அவை அனைத்தும்
கலைந்து போகும் கோலங்கள்...
அலை கரையை காலம் காலமாய்
காதலித்தே சென்றாலும் ..
கதிரவன் ஆழ கடலில்
முக்குளித்து காதல் கொண்டாலும்...
அனைத்தும் சேராத காதல்தான்
கற்பனைக்கு மட்டும்
கவி தந்த காதல் சங்கமங்கள் ..
அது போல் கற்பனைக்கு
கவி தரும் என் காதல்
நினைவலைகள்
உன்னுள் மூழ்கி
உரு தெரியாமல் போன என் நினைவுகள்
ஆழ்ந்து போன அந்த டைடானிக் கப்பல்தான் ...
அழகான காதல் நினைவுகள்
அலங்கார ஆசை நிகழ்வுகள்
அத்தனையும் அமிழ்ந்துபோனாலும்
அனைத்தும் என் நினைவு எனும்
நங்கூரம் போட்டு
மனம் எனும் ஆழ்கடலில்
நிறுத்தி வைத்திருகின்றேன்
என் நினைவு பொக்கிசங்கள்
திருடபடக்கூடாது என்பதற்காய் ...
நீள வானும் .... நீந்தும் கடலும்
கரை மோதும் அலையும்
இருக்கும் வரை
என் காதலும் வாழும் நினைவுகளாய் ..
அழகான வேளை
தன் தீராத காதலை
தினம் தோறும்
அலை அவள்
கரைகளில் எழுதியவண்ணம்
காலம் காலமாய்
மாலை பொழுதுக்காய்
பகலெல்லாம் சுட்டெரித்து
தன் கோபத்தை ..
தன் கடல் எனும் காதலனை
சேரமுடியாது தவித்த சோகத்தை
அவனுள்ளே முக்குளித்து
முழுவதும் குளிர
எத்தனிக்கும் கதிரவன்
இவற்றை எல்லாம் பார்த்து
வெக்கி சிவந்த பொன்வானம்
சிவந்த செவ்வானம் ....
சிந்தை மயக்க
சிலிர்ப்பு ஊட்டும்
மயக்கும் மாலை பொழுது
எனவனும் நானும்
எழுதபடாத ஓவியங்களாய்
செதுக்கப்பட்டத சித்திரங்களாய்
படிக்கப்படாத காவியங்களாய்
பாரில் தோன்றும்
பலவித இயற்க்கை அழகினை
ரசித்த வண்ணம் ...
கையேடு கை கோர்த்து
கண்ணோடு கண் நோக்கி
கருத்தோடு கலந்து
இயற்க்கை காதலுக்கு
நம் காதல் சளைத்ததல்ல
சவால் விட்ட வண்ணம்
சரசமாடிய தருணங்கள்
அவை அனைத்தும்
கலைந்து போகும் கோலங்கள்...
அலை கரையை காலம் காலமாய்
காதலித்தே சென்றாலும் ..
கதிரவன் ஆழ கடலில்
முக்குளித்து காதல் கொண்டாலும்...
அனைத்தும் சேராத காதல்தான்
கற்பனைக்கு மட்டும்
கவி தந்த காதல் சங்கமங்கள் ..
அது போல் கற்பனைக்கு
கவி தரும் என் காதல்
நினைவலைகள்
உன்னுள் மூழ்கி
உரு தெரியாமல் போன என் நினைவுகள்
ஆழ்ந்து போன அந்த டைடானிக் கப்பல்தான் ...
அழகான காதல் நினைவுகள்
அலங்கார ஆசை நிகழ்வுகள்
அத்தனையும் அமிழ்ந்துபோனாலும்
அனைத்தும் என் நினைவு எனும்
நங்கூரம் போட்டு
மனம் எனும் ஆழ்கடலில்
நிறுத்தி வைத்திருகின்றேன்
என் நினைவு பொக்கிசங்கள்
திருடபடக்கூடாது என்பதற்காய் ...
நீள வானும் .... நீந்தும் கடலும்
கரை மோதும் அலையும்
இருக்கும் வரை
என் காதலும் வாழும் நினைவுகளாய் ..
Sunday, July 15, 2012
ஏன் ...?
ஏன் ...?
எதுவும் புரியவில்லை ..
உனக்காக சுவாசித்தேன்
உன்னையே நேசித்தேன்
இருந்தும் ..
என் மீது ஏன் வெறுப்பு கொள்கிறாய் ...
என் இரவுகள் விடிவதில்லை
உன் உறவுகள் தொடராத போது..
என் உணர்வுகள்
உணர்வதே இல்லை
உன் உதடுகள் தீண்டாத போது ...
என் கனவுக்கு அழைப்பு விடுத்தவனே
காலனுக்கும் அழைப்பு விடு
உன் காதலி துயில் கொள்ள ...
Friday, July 13, 2012
காதல் பரிசு ..
அங்கம் உரச
அணுவும் தீ பற்ற
அணு அணுவாய் ஆகிரமித்தாய்
அழகாய் அன்றலர்ந்த தாமரையாய்
உன் கையில் அவள் ...
உன் வேட்கை தீக்கங்குகள்
விரகமாய் பற்றி கொள்ள
விரசமாய் விரகமாய்
உன் தீண்டல் எல்லை மீறி
சுகத்தின் எல்லையை தேட
மோகத் தீயில் முழுவதுமாய் அவள்
முனகலோடு உன்னை அழைக்க
முழுவதுமாய் ஒன்றிவிட்டாய்..
உன்னை நேசிக்கும் ஓர் இதயம்
ஓரமாய் உக்கார்ந்து
உலகமே அழிவதாய்
ஒப்பாரி வைப்பது தெரிந்தும் புறக்கணித்து ...நீ தொடர
தனக்கே சொந்தமான ஒன்று
தன் கண் முன்னே கலைவது கண்டு
தன் இயலாமை எண்ணி
கண் மடல் வழி வழிந்த உப்பு துளிகள்
உறக்கத்தை கலைத்தபோது
தெரிந்து கொண்டேன்
கண்டது கனவென்று ..
கனவில் கூட என்னை கண் கலங்க வைக்கும்
உன் கல்நெஞ்சு
காலத்துக்கும் எனக்கு பரிசு
காதல் பரிசு ..
Tuesday, July 3, 2012
Subscribe to:
Posts (Atom)