Wednesday, May 30, 2012

வேண்டும் ..




ஒரு நொடி போதும்
உன்னை உளமார உயிர்தொடுகின்ற
ஒரு நொடி போதும்


பல மணி போதும்
உன்னில் பூவாக நான் சாய்ந்து
மணம்வீசும்
பல மணி போதும்


பல இரவுகள் வேண்டும்
பகலோடு நான் காணும்
துன்பங்கள் தூசாகி
லேசாகி உன் மடி சாய
பல இரவுகள் வேண்டும்


பல யுகம் வேண்டும்
உன் நினைவோடு உறவாடி
நிழலாக தொடர்கின்ற
பலயுகம் வேண்டும் ..

அணைக்கின்ற சுகம் வேண்டும்..




அன்பே
உன் தலை கோத வேண்டும்..
அலைபோன்ற உன் முடிகோதி
அணைக்கின்ற ஒளி தேடி
அன்பாலே அடிகூடி
உன்னை அணைக்கின்ற சுகம் வேண்டும் ...

மனம்போல மனம்கூடி
மது ஒன்றில் மலர் மூழ்கி
மன்னவனே உன் முடி கோதும்
மதுவூட்டும் போதை வேண்டும்..

பேதை இவள் பேதளிக்கின்றேன்
பிரியாத பொழுதுகள் வேண்டும்..
உன்னை நகராத இனிமைகள் வேண்டும்..
துவளாத உணர்வுகள் வேண்டும்..
அதில் சுகமாக உன் முடி கோதவேண்டும் ..
உன் தலை முடி நான் ஆளவேண்டும் ..